14 3
இலங்கைசெய்திகள்

அரச குடியிருப்புகளை ஒப்படைக்க தயங்கும் அரசியல்வாதிகள்

Share

அரச குடியிருப்புகளை ஒப்படைக்க தயங்கும் அரசியல்வாதிகள்

முன்னாள் அமைச்சர்கள் உட்பட நான்கு முன்னணி அரசியல்வாதிகள் இதுவரை தமது அரசாங்க குடியிருப்புகளை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நீதித்துறை, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின் அறிவிப்பின் படி இதுவரை ஒப்படைக்கவில்லை என கூறப்படுகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் மறைந்த சனத் நிஷாந்த, முன்னாள் இராஜாங்க அமைச்சர் மொஹான் பி டி சில்வா, முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட குடியிருப்புகள் இதுவரை கையளிக்கப்படவில்லை.

அமைச்சின் செயலாளருடன் கலந்தாலோசிக்க நடவடிக்கை
மோகன் டி சில்வா பயன்படுத்திய குடியிருப்பு இன்று (5) கையளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வசித்து வருவதாகவும், பல தடவைகள் அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட போதிலும், அவர்கள் இன்னும் அங்கேயே தங்கியிருப்பதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் அமைச்சின் செயலாளருடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 7 பகுதியில் இந்த குடியிருப்புகளை அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...