14 3
இலங்கைசெய்திகள்

அரச குடியிருப்புகளை ஒப்படைக்க தயங்கும் அரசியல்வாதிகள்

Share

அரச குடியிருப்புகளை ஒப்படைக்க தயங்கும் அரசியல்வாதிகள்

முன்னாள் அமைச்சர்கள் உட்பட நான்கு முன்னணி அரசியல்வாதிகள் இதுவரை தமது அரசாங்க குடியிருப்புகளை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நீதித்துறை, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின் அறிவிப்பின் படி இதுவரை ஒப்படைக்கவில்லை என கூறப்படுகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் மறைந்த சனத் நிஷாந்த, முன்னாள் இராஜாங்க அமைச்சர் மொஹான் பி டி சில்வா, முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட குடியிருப்புகள் இதுவரை கையளிக்கப்படவில்லை.

அமைச்சின் செயலாளருடன் கலந்தாலோசிக்க நடவடிக்கை
மோகன் டி சில்வா பயன்படுத்திய குடியிருப்பு இன்று (5) கையளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வசித்து வருவதாகவும், பல தடவைகள் அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட போதிலும், அவர்கள் இன்னும் அங்கேயே தங்கியிருப்பதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் அமைச்சின் செயலாளருடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 7 பகுதியில் இந்த குடியிருப்புகளை அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...