அனுராதபுரம் மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள ஹேவ்லாக் சிட்டி வீட்டுத் தொகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணின் சூட்கேஸில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி, கடந்த செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் தற்போது துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.