5 14
இலங்கைசெய்திகள்

அரசியலில் இருந்து முற்றாக ஓய்வு பெறும் முன்னாள் அமைச்சர்

Share

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அரசியல் செயற்பாடுகளில் இருந்து முற்றாக ஒதுங்கி ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், கடந்த 2010ஆம் ஆண்டளவில் அரசியல் செயற்பாடுகளை விட்டும் ஒதுங்கிக் கொண்டிருந்தார்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தனியாகப் பிரிந்து ஐக்கிய மக்கள் சக்தியை ஆரம்பித்த போது சுமார் ஒன்பது வருடங்களின் பின்னர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மீண்டும் அரசியல் களத்துக்குத் திரும்பி, அதில் இணைந்து கொண்டார்.

அவருக்கு அக்கட்சியின் தவிசாளர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் போக்கில் அதிருப்தி கொண்ட இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், அண்மையில் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.

தற்போது கட்சி அரசியல் செயற்பாடுகளில் இருந்து முற்றாக ஒதுங்கிக் கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள அவர், இனி வரும் காலங்களில் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயற்படப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக சமூக சேவை விடயங்களில் நாட்டம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...