16
இலங்கைசெய்திகள்

குற்றப்புலனாய்வு விசாரணையை புறக்கணித்தாரா டிரான் அலஸ்! வழங்கப்பட்டுள்ள பதில்

Share

குற்றப்புலனாய்வு விசாரணையை புறக்கணித்தாரா டிரான் அலஸ்! வழங்கப்பட்டுள்ள பதில்

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான வாக்குமூலங்களை வழங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தமக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் தாம் விளக்கமளிக்கத் தயாராக இருப்பதாகவும், தனக்கும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் அவ்வாறு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றத்தினால் வாக்குமூலங்களைப் பெறுமாறு கோரப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் குழுவில் சிலர் ஏற்கனவே வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகத் தமக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரை புறக்கணிப்பதற்கு தனக்கு எந்த விருப்பமும் இல்லை எனவும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...

17 3
இலங்கைஅரசியல்செய்திகள்

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: பொருளாதாரப் பாதிப்புகளைத் தடுக்க ஜனாதிபதி அநுர தலைமையில் அவசரத் திட்டம்!

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சவாலாக ஏற்று, அனைத்து அரச துறைகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது...