16
இலங்கைசெய்திகள்

குற்றப்புலனாய்வு விசாரணையை புறக்கணித்தாரா டிரான் அலஸ்! வழங்கப்பட்டுள்ள பதில்

Share

குற்றப்புலனாய்வு விசாரணையை புறக்கணித்தாரா டிரான் அலஸ்! வழங்கப்பட்டுள்ள பதில்

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான வாக்குமூலங்களை வழங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தமக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் தாம் விளக்கமளிக்கத் தயாராக இருப்பதாகவும், தனக்கும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் அவ்வாறு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றத்தினால் வாக்குமூலங்களைப் பெறுமாறு கோரப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் குழுவில் சிலர் ஏற்கனவே வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகத் தமக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரை புறக்கணிப்பதற்கு தனக்கு எந்த விருப்பமும் இல்லை எனவும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...