16 18
இலங்கைசெய்திகள்

அரசியலில் இருந்து ஓய்வு பெற போவதாக முன்னாள் அமைச்சர் சவால்

Share

அரசியலில் இருந்து ஓய்வு பெற போவதாக முன்னாள் அமைச்சர் சவால்

கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதுடன், எதிர்வரும் பொதுத் தேர்தல் போட்டியில் இருந்தும் விலகிக்கொள்ளவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைப்பற்றப்பட்ட வாகனங்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (21.10.2024) கருத்து தெரிவித்துள்ள அவர்,

“கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தமக்கு சொந்தமானது என நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தாம்,ஏமாற்றவோ அல்லது திருடவோ அரசியலில் ஈடுபடவில்லை.

எனவே, இந்த விவகாரங்கள் குறித்து உண்மையைக் கண்டறிந்த பிறகு விவாதிப்பது நல்லது என்று அவர் கூறியுள்ளார். நேற்றைய தினம் கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சுமார் 60 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பிஎம்டபில்யூ மற்றும் பஜேரோ ஜீப் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.

கண்டி அனிவத்தையில் உள்ள அபேகுணவர்தனவின் மருமகனின் வசிப்பிடத்திலிருந்து அவை கைப்பற்றப்பட்டன. அவர் துறைமுக அதிகாரசபையில் முக்கிய பொறுப்பை வகித்த நிலையில், அங்கிருந்தே இந்த வாகனங்கள் எடுத்துவரப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இந்தநிலையில், அந்த வாகனங்கள் தமது மருமகனுடையது என்றால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தன்னை ஏன் குறிவைக்க வேண்டும்? எனவே, வேறு ஒருவரின் குற்றங்கள் அல்லது மோசடிகளுக்கு தாம் பொறுப்பல்ல” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...