tamilnih 35 scaled
இலங்கைசெய்திகள்

கடும் நெருக்கடியில் மக்கள்

Share

மக்கள் அன்றாட வாழ்க்கையை முன்னகர்த்த முடியாது நெருக்கடியில் சிக்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்ற எமது தீர்மானங்கள் சரியானவையென்று பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் தற்போது வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வற்வரி அதிகரிப்பு தொடர்பில் கருத்துக்களை வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார ரீதியில் நெருக்கடியான நிலைமையொன்று ஏற்பட்டபோது அதனை உள்நாட்டு நிலைமைகள் ஊடாக சீர் செய்ய முடியும் என்ற விடயத்தினை நாம் கடந்த காலங்களில் தொடர்சியாக வலியுறுத்திக் கூறினோம்.

சர்வதேச நாணய நிதியத்திடம் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதால் நிலைமைகள் மேலும் மோசமடையும் என்று சுட்டிக்காட்டியதோடு குறிப்பாக சாதாரண மக்களின் அன்றாட வாழ்வாதார நிலைமைகள் நெருக்கடிக்குள்ளாகும் என்றும் குறிப்பிட்டேன்.

எனினும், அச்சமயத்தில் என்மீதும் அப்போதைய அரசாங்கத்தின் மீதும் மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவில்லை என்று குறிப்பிட்டு எனக்கு எதிராக நீதிமன்றத்தைக் கூட நாடியிருந்தார்கள்.

ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் சர்வதேச நாணய நிதியத்தினை நாடினார்கள். நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணைப் பணத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், தற்போது மக்கள் மீது வரிச்சுமை அதிகரித்துள்ளது.

மக்கள் அன்றாடவாழ்க்கையை முன்னகர்த்த முடியாது நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இந்த தருணத்தில் பலர் நாம் ஏலவே தெரிவித்த கருத்துக்களும், தீர்மானமும் சரி என்பதை ஏற்றுக்கொள்கின்றது.

அதனை பொதுமக்களும் ஏற்றுக்கொள்ளும் காலமும் வந்துவிட்டது. அந்த அடிப்படையில் ஒருவிடயத்தினைக் கூற வேண்டியுள்ளது.

குறிப்பாக ஆற்றில் குதிப்பதற்கு முன்னதாக அங்கே முதலைகள் இருக்கின்றனவா என்பதை ஒன்றுக்கு இரண்டு மூன்று தடவைகள் பரிசீலனைக்கு உட்படுத்திய பின்னரே குதிப்பதற்கு தயாராக வேண்டும்.

அவ்வாறு இல்லாது விட்டால் தற்போதைய நிலைமைகளே உருவாகும் என்பது மிகத்தெளிவானது என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...