4
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்கள் பலரை நாடு கடத்த தயாராகும் இலங்கை அரசாங்கம்

Share

வெளிநாட்டவர்கள் பலரை நாடு கடத்த தயாராகும் இலங்கை அரசாங்கம்

இலங்கையில் பல்வேறு காரணங்களுக்காக விசா இன்றி தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டினரையும் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அடையாளம் காணும் நபர்களை கைது செய்து நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வீசா இன்றி நாட்டில் தங்கியுள்ள நபர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா, ரஷ்யா, மியான்மர், நைஜீரியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து விசா இன்றி பணிபுரியும் வெளிநாட்டவர்கள் பற்றிய தகவல்களை பாதுகாப்பு தரப்பினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் ஹோட்டல்களை நடத்தும் வெளிநாட்டவர்கள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...