இலங்கைசெய்திகள்

அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ள வெளிநாட்டு பயணி

Share
24 6726d2284ea6a
Share

அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ள வெளிநாட்டு பயணி

தனது தொலைந்து போன பயணப்பொதிகள் விரைவாக மீட்கப்பட்டதை அடுத்து இலங்கை அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும், கிரிகோரியன் மரின் (Grigoryan Marin) என்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகளின் ஊடகச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, கடந்த அக்டோபர் 20ஆம் திகதியன்று மரின் இலங்கையை வந்தடைந்தார்.

இதன்போது, விமான நிலையத்தில் அவரது பையை காணவில்லை என்று முறையிட்டதை அடுத்து, பையை எடுத்துச் சென்ற பதுளையைச் சேர்ந்த பெண் ஒருவரை அடையாளம் கண்டு அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் அவரிடம் இருந்து நீதிமன்றால் 600,000 ரூபாய் இழப்பீடும் அறிவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்தே விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத்தின் (Vijitha Herath) விரைவான நடவடிக்கைக்கு காணொளி செய்தி ஒன்றின் மூலம் வெளிநாட்டு பயணியான மரின் நன்றி தெரிவித்;துள்ளார்.

 

 

 

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...