24 6726d2284ea6a
இலங்கைசெய்திகள்

அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ள வெளிநாட்டு பயணி

Share

அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ள வெளிநாட்டு பயணி

தனது தொலைந்து போன பயணப்பொதிகள் விரைவாக மீட்கப்பட்டதை அடுத்து இலங்கை அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும், கிரிகோரியன் மரின் (Grigoryan Marin) என்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகளின் ஊடகச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, கடந்த அக்டோபர் 20ஆம் திகதியன்று மரின் இலங்கையை வந்தடைந்தார்.

இதன்போது, விமான நிலையத்தில் அவரது பையை காணவில்லை என்று முறையிட்டதை அடுத்து, பையை எடுத்துச் சென்ற பதுளையைச் சேர்ந்த பெண் ஒருவரை அடையாளம் கண்டு அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் அவரிடம் இருந்து நீதிமன்றால் 600,000 ரூபாய் இழப்பீடும் அறிவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்தே விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத்தின் (Vijitha Herath) விரைவான நடவடிக்கைக்கு காணொளி செய்தி ஒன்றின் மூலம் வெளிநாட்டு பயணியான மரின் நன்றி தெரிவித்;துள்ளார்.

 

 

 

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...