rtjy 277 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் உணவகம் ஒன்றிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Share

கொழும்பில் உணவகம் ஒன்றிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுகளை புறக்கணித்து, நீண்டகாலமாக பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்து வந்த உணவகமொன்றை மூடுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு 12, மார்டிஸ் லேனில் உள்ள உணவகம் ஒன்றையே இவ்வாறு மூடுமாறு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 15ஆம் திகதி கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அந்த உணவகத்திற்கு எதிராக 10 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் அந்த உணவகத்திற்கு குற்றச்சாட்டை திருத்துவதற்காக ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தவறுகளை திருத்திக்கொள்ளாத காரணத்தினால் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீண்டும் நீதிமன்றில் அந்த உணவகம் குறித்த உண்மைகளை அறிக்கை செய்துள்ளனர்.

இந்நிலையிலே மாளிகாகந்த நீதிமன்ற நீதவான் லோச்சனா அபேவிக்ரம, 25,000 ரூபா அபராதம் விதித்து குறித்த உணவகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
google logo
செய்திகள்உலகம்

ஊழியர்களை சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்குமாறு கூகுள் எச்சரிக்கை!

அமெரிக்க விசா வைத்திருக்கும் தனது ஊழியர்கள் சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என கூகுள் நிறுவனம்...

image 42fd4006b9
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளமைக்க யுனிசெப் ஆதரவு: பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் முக்கிய சந்திப்பு!

அண்மைக்கால அனர்த்தங்களினால் சேதமடைந்த பாடசாலைக் கட்டமைப்புகளைச் சீரமைப்பது மற்றும் மாணவர்களின் கல்வியைத் தொடர்வது குறித்து பிரதமர்...

25 69468dc6982f1
செய்திகள்உலகம்

பாலைவன தேசத்தில் பனிப்பொழிவு: சவூதியில் மைனஸ் 4 டிகிரி குளிரால் மக்கள் ஆச்சரியம்!

வெப்பமான வானிலைக்குப் பெயர் பெற்ற சவூதி அரேபியாவில், தற்போது நிலவி வரும் கடும் பனிப்பொழிவு உலக...

images 5 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெருகலில் மீண்டும் வெள்ள அபாயம்: மகாவலி கங்கையின் நீர்வரத்தால் வீதிகள், குடியிருப்புகள் மூழ்கின!

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசம் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கத்...