18 18
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு பிரதி அமைச்சரின் அறிவுறுத்தல்

Share

அரச ஊழியர்களுக்கு பிரதி அமைச்சரின் அறிவுறுத்தல்

வெள்ளப் பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கு அரச உத்தியோகத்தர்கள் கடினமாக பயணியாற்ற வேண்டும் என்று கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க(Upali Samarasinghe) தெரிவித்துள்ளார்.

வெள்ள நிலமை தொடர்பாக ஆராயும் கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று(28) இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வெள்ளப்பாதிப்பு விடயத்தில் வவுனியா மாவட்ட செயலகம் விரைவான நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

அந்தவகையில் இன, மத, பேதம் என்ற விடயம் இங்கு இல்லை. அனைவரும் எங்களுடைய மக்கள். அரசியல் பேதமின்றி இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு நாம் அனைவரும் ஒன்றாக உழைக்கவேண்டும்.

அரச உத்தியோகத்தர்கள் என்ற வகையில் நீங்கள் இந்த விடயத்தில் சற்று கடினமாக பணியாற்றவேண்டும்.

இதில் இருந்து விடுபடுவதற்கு அரசாங்கத்திடம் இருந்து நிதி உட்பட வேறு எவ்வாறான விடயங்கள் தேவையென்றாலும் அதில் தலையிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...