15 14
இலங்கைசெய்திகள்

மன்னாரில் வெள்ள அனர்த்தம் : இடைத்தங்கல் முகாமிற்கு ரவிகரன் எம்.பி விஜயம்

Share

மன்னாரில் வெள்ள அனர்த்தம் : இடைத்தங்கல் முகாமிற்கு ரவிகரன் எம்.பி விஜயம்

மன்னாரில் (Mannar) கனமழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் ஓலைத்தொடுவாய் றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ்கலவன் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மக்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T.Raviharan) நேற்று (24) சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது, காற்றாலை திட்டத்தினால் வடிகால்கள் மூடப்பட்டதனாலேயே ஓலைத் தொடுவாய் பகுதியில் வெள்ளப் பாதிப்பு அதிகரித்திருப்பதாக மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.

இவ்வாறு காற்றாலைத் திட்டத்தின்போது மூடப்பட வாய்க்கால்களை மறுசீரமைப்புச் செய்தால் வெள்ள அனர்த்தத்தைக் குறைக்க முடியும் எனவும் அதற்கு உரிய நவடிக்கை எடுக்குமாறு சுட்டிக்காட்டப்பட்டதுடன் நுளம்பு வலைக்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் வாய்க்கால்களை மறுசீரமைப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்ததுடன், நுளம்புவலை தொடர்பில் மன்னார் மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதனையடுத்து, இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கு நுளம்பு வலைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...