இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனையில் முதியோருக்கான சிறப்பு நிலையான வைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கை குடிமக்களால் திறக்கப்படும் நிலையான வைப்புகளுக்கு செயல்படுத்தப்படும்.
நிலையான வைப்பு காலம் 12 மாதங்கள் மற்றும் அதிகபட்ச வைப்பு மதிப்பு ஒரு மில்லியன் ரூபாயாகும்.
பொதுவாக வங்கியின் நிலையான வட்டி வீதத்திற்கு மேலதிகமாக வருடாந்தம் 3 சதவீதம் சேர்க்கப்படும் தொகை அல்லது உரிய வங்கியினால் வெளியிடப்பட்ட நிலையான வைப்பு வட்டி விகிதம் ஆகியவற்றில் அதிகமான வட்டி வீதம் செலுத்தப்படும்.