7 5 scaled
இலங்கைசெய்திகள்

ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள இலங்கையர்கள்: வெளியான அறிக்கை

Share

ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள இலங்கையர்கள்: வெளியான அறிக்கை

ஐந்து இலட்சம் இலங்கையர்கள் ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச்சபையின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

யுக்திய நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் குறித்து ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரிகள் என அடையாளம் காணப்பட்ட 5979 பேரில் 5449 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அது (91%) வீதமாக காணப்படுவதாகவும் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

இதுவரை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 19 மில்லியன் ரூபா எனவும், சட்டவிரோதமாக பெறப்பட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்களின் பெறுமதி 11 457 மில்லியன் ரூபா எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 1078 பேரின் பெயர் பட்டியல் பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இவர்களை கைது செய்ய பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...