25 68fac83aa62ba
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

10 கோடி கொள்ளை: செட்டியார் தெரு நகையகப் பணத்தை அபகரித்த மதுவரி அதிகாரிகள் 05 பேர் கைது!

Share

கடந்த ஜூன் மாதம் கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள இரண்டு நகையகங்களில் 10 கோடியே 20 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக, மதுவரித் திணைக்களத்தின் 05 அதிகாரிகள் இன்று (30) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 05 ஆம் திகதி, குறித்த மதுவரி அதிகாரிகள் ‘தேடுதல்’ என்ற போர்வையில் இரண்டு நகையகங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, அவர்கள் 10 கோடியே 20 இலட்சம் ரூபாய் பணத்தைக் கைப்பற்றியதுடன், சட்டவிரோத சிகரெட்டுகள் வைத்திருந்ததாகக் கூறப்பட்ட பொய்யான குற்றச்சாட்டின் பேரில் 07 பேரை கைது செய்ததாகக் காவல்துறை ஊடகப் பிரிவு முன்னர் தெரிவித்திருந்தது.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேரை மாத்திரம் அன்றைய தினமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய அதிகாரிகள், கைப்பற்றிய பணத்தில் 05 கோடி ரூபாயை மாத்திரம் நகையக உரிமையாளர்களுக்குத் திருப்பிச் செலுத்தியுள்ளனர். எஞ்சிய பணத்தின் கணக்கு குறித்து அதிகாரிகள் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நகையக உரிமையாளர்களால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மதுவரித் திணைக்களத்தைச் சேர்ந்த 05 அதிகாரிகளும் இன்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட 05 அதிகாரிகளையும் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தியபோது, எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அன்றைய தினம் சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

Share
தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...