24 15
இலங்கைசெய்திகள்

நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு!

Share

நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு!

நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தேர்தல்களை முன்னிட்டு இவ்வாறு பட்டாசு உற்பத்தி அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதுடன், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் சில தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை முன்னிட்டு பொதுவாக ஆகஸ்ட் மாதம் பட்டாசு உற்பத்தி ஆரம்பிக்கப்படும்.

எனினும், தேர்தல்களை முன்னிட்டு முன்கூட்டியே பட்டாசு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா, காலி, கண்டி மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...

04 22
உலகம்செய்திகள்

மழைக்கும் மத்தியிலும் ஈரான் தலைநகரில் பிரம்மாண்டப் போராட்டம்: உச்சத் தலைவருக்கு ஆதரவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 24, 2026)...

03 23
செய்திகள்இலங்கை

சீமெந்து விலை 2,250 ரூபாவாக அதிகரிப்பு: கட்டுமாணத் துறை மேலும் நெருக்கடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கட்டுமாணப் பொருட்களின் விலைகள் மீண்டும்...