2 2 scaled
இலங்கைசெய்திகள்

சாந்தனை இந்தியாவிற்கு அனுப்பிய பொட்டம்மான்! தாயாருக்கு கூறிய ரகசியம்

Share

சாந்தனை இந்தியாவிற்கு அனுப்பிய பொட்டம்மான்! தாயாருக்கு கூறிய ரகசியம்

“நீங்கள் எங்களுக்குச் செய்த தியாகம் போதும். அவனை நாங்கள் ஒரு வெளிநாட்டுக்கு அனுப்புகின்றோம் அவன் உங்கள் குடும்பத்தை பார்க்கட்டும்.” என்பதுடன் அப்பாவை புலனாய்வுத்துறையின் வாகனங்களுக்குரிய பொறுப்பாளராகவும் பொட்டம்மான் நியமித்தார் என மறைந்த சாந்தனின் சகோதரர் மதிசுதா தெரிவித்துள்ளார்.

சாந்தனின் சகோதரான மதிசுதா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட பதிவிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, இலங்கை, இந்திய இராணுவத்தின் மிக நெருக்கடியான காலத்திலும் அத்தனை போராளிகளுக்கும் உணவு தயாரிப்பதுடன் மறைமுக அரணாக இருந்த எமது இல்லத்தை கல்வீடாக மாற்றுவதற்கு சீமேந்து பைகள் அளித்ததுடன் அதில் குடியமர்த்தி வைப்பதில் பொட்டம்மான் பெரும் பங்காற்றினார்.

பிற்காலத்தில் மல்லாவி வரும்போதெல்லாம் அம்மாவிடம் ஒரு பிடியாவது வாங்கி உண்டு செல்லும் பொட்டம்மான் மேற்குறிப்பிட்ட உண்மையை கூறினார்.

சாந்தனை காவல்துறையினர் தூக்கத்தில் வைத்து கைது செய்தபோது அவர் சயனைட் (நஞ்சு) உட்கொள்ள முற்பட்டார். ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிவராசண்ணாவின் பணத்தை கையாண்டதைத் தவிர வேறு எந்த விடயத்திலும் எனது அண்ணா சாந்தன் (தில்லையம்பலம் சுதேந்திரராஜா) தொடர்புபடவில்லை.

சாந்தன் என்பவரின் குற்றச்சாட்டுக்களை தில்லையம்பலம் சுதேந்திரராஜா மேல் போட்டேன் என விசாரணை அதிகாரியே பகிரங்கமாக கூறி வருத்தமும் தெரிவித்திருந்தார்.

மறைக்கப்படும் மற்றும் திரிபுபடுத்தப்படும் வரலாறுகளை, மற்றவர்களுக்கு பாதிப்பற்ற வகையில் சொல்ல வேண்டிய கடமையானது குடும்ப உறுப்பினரான எனக்கு என்றும் உண்டு.

இத்தகவல்கள் அவரிடம் நேரடியாகவும், பொட்டு அம்மான் மூலமாகவும், அவரது சக போராளிகளூடாகவும் பெறப்பட்டதுடன் நான் குறிப்பிடுபவை நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டவை மட்டுமேயாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...