24 6653f2a771813
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உயிரிழந்த பிரான்ஸ் தூதுவர்: இறுதி முடிவு

Share

இலங்கையில் உயிரிழந்த பிரான்ஸ் தூதுவர்: இறுதி முடிவு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் மரணம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

அவரது இறுதிக் கிரியைகள் இலங்கையில் நடைபெறுமா இல்லாவிட்டால் சடலம் பிரான்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுமா என்பது குறித்து இன்று (27) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் ( Jean Francois Pactet) நேற்று (26) பிற்பகல் இராஜகிரியில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வெலிக்கடை காவல்துறை அதிகாரிகள் குழுவினால் சடலமாக மீட்கப்பட்டார்.

அதன்படி, திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், 1970 இல் பிறந்த Jean Francois Pactet, ஒக்டோபர் 2022 முதல் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவராக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...