30 11
இலங்கைசெய்திகள்

சஜித் கட்சிக்குள் கடும் மோதல்

Share

சஜித் கட்சிக்குள் கடும் மோதல்

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உட்கட்சி முரண்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தலுக்கான தேசியப் பட்டியல் தொடர்பில் இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

குறிப்பாக டலஸ் அழகப்பெரும, சுஜீவ சேனசிங்க ஆகியோர் தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டமை தொடர்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடும் ஆட்சேபனையை முன்வைத்துள்ள நிலையில், பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து விலகிய டலஸ் அழகப்பெருமவை தேசியப்பட்டியலில் இணைத்தமை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 2020 பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படத் தவறிய சுஜீவ சேனசிங்கவும் தேசியப் பட்டியலில் சேர்ந்தமை கட்சிக்குள் மேலும் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.

தொகுதி மற்றும் மாவட்ட மட்டத்தில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு தேசிய பட்டியல் வாய்ப்பு வழங்கப்படாமையே இந்த முறுகல் நிலைமைக்கு பிரதான காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...