இலங்கைசெய்திகள்

சஜித் கட்சிக்குள் கடும் மோதல்

Share
30 11
Share

சஜித் கட்சிக்குள் கடும் மோதல்

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உட்கட்சி முரண்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தலுக்கான தேசியப் பட்டியல் தொடர்பில் இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

குறிப்பாக டலஸ் அழகப்பெரும, சுஜீவ சேனசிங்க ஆகியோர் தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டமை தொடர்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடும் ஆட்சேபனையை முன்வைத்துள்ள நிலையில், பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து விலகிய டலஸ் அழகப்பெருமவை தேசியப்பட்டியலில் இணைத்தமை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 2020 பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படத் தவறிய சுஜீவ சேனசிங்கவும் தேசியப் பட்டியலில் சேர்ந்தமை கட்சிக்குள் மேலும் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.

தொகுதி மற்றும் மாவட்ட மட்டத்தில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு தேசிய பட்டியல் வாய்ப்பு வழங்கப்படாமையே இந்த முறுகல் நிலைமைக்கு பிரதான காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...