30 11
இலங்கைசெய்திகள்

சஜித் கட்சிக்குள் கடும் மோதல்

Share

சஜித் கட்சிக்குள் கடும் மோதல்

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உட்கட்சி முரண்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தலுக்கான தேசியப் பட்டியல் தொடர்பில் இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

குறிப்பாக டலஸ் அழகப்பெரும, சுஜீவ சேனசிங்க ஆகியோர் தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டமை தொடர்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடும் ஆட்சேபனையை முன்வைத்துள்ள நிலையில், பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து விலகிய டலஸ் அழகப்பெருமவை தேசியப்பட்டியலில் இணைத்தமை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 2020 பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படத் தவறிய சுஜீவ சேனசிங்கவும் தேசியப் பட்டியலில் சேர்ந்தமை கட்சிக்குள் மேலும் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.

தொகுதி மற்றும் மாவட்ட மட்டத்தில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு தேசிய பட்டியல் வாய்ப்பு வழங்கப்படாமையே இந்த முறுகல் நிலைமைக்கு பிரதான காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
world 133
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் பயங்கரம்: இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12, 2026) இடம்பெற்ற மோதலில்...

world 132
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான உடன்படிக்கை சாத்தியமானது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் நம்பிக்கை!

அமெரிக்கா தனது ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, ஈரான் தேசத்தின் உரிமைகளை மதித்து நடந்தால், இரு நாடுகளுக்கும்...

world 130
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் முறைகேடு: சி.ஐ.டி-யில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புகார்!

நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி (Tender) செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை...

world 136
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசியப் பூங்காவில் சட்டவிரோத வேட்டை: 92 கிலோ இறைச்சியுடன் இருவர் கைது!

யால தேசியப் பூங்காவின் 02-ம் மண்டலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை...