30 11
இலங்கைசெய்திகள்

சஜித் கட்சிக்குள் கடும் மோதல்

Share

சஜித் கட்சிக்குள் கடும் மோதல்

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உட்கட்சி முரண்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தலுக்கான தேசியப் பட்டியல் தொடர்பில் இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

குறிப்பாக டலஸ் அழகப்பெரும, சுஜீவ சேனசிங்க ஆகியோர் தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டமை தொடர்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடும் ஆட்சேபனையை முன்வைத்துள்ள நிலையில், பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து விலகிய டலஸ் அழகப்பெருமவை தேசியப்பட்டியலில் இணைத்தமை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 2020 பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படத் தவறிய சுஜீவ சேனசிங்கவும் தேசியப் பட்டியலில் சேர்ந்தமை கட்சிக்குள் மேலும் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.

தொகுதி மற்றும் மாவட்ட மட்டத்தில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு தேசிய பட்டியல் வாய்ப்பு வழங்கப்படாமையே இந்த முறுகல் நிலைமைக்கு பிரதான காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...