6 2
இலங்கைசெய்திகள்

மகிந்தானந்தவின் ஜம்பர் விவகாரம்! சபையில் கொந்தளித்த சாமர

Share

நமது நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்கு, தேசிய மக்கள் சக்தி அரசாங்க தரப்பினரும் ஜம்பர் அணியவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தற்போதைய நீதியமைச்சரே முதலில் ஜம்பர் அணிவார் என்றும் கூறியுள்ளார்.

கைதுசெய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்.பி மகிந்தானந்த அளுத்கமகேவின் உடை தொடர்பில் செய்திகளில் வெளியாகிய கருத்துக்களை நாடாளுமன்றில் வெளிப்படுத்தும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சபையில் எதேனும் ஒரு உரையை தெரிவித்தால் நீதியமைச்சர் என்ற ரீதியில் அதனை செவிமடுக்க வேண்டும். நீதியமைச்சருக்கான ஆசனத்தில் அமர்ந்துக்கொண்டு இவ்வாறு செய்வது நாடாளுமன்ற விதிகளுக்கு முரணானது.

நான் இங்கு யாருடைய பெயரையும் குறிப்பிட்டு கருத்துக்களை முன்வைக்க விரும்பவில்லை. இங்கு ஒரு விடயத்தை சுட்டிக்காட்டவேண்டும்.

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே சிறையில் அடைக்கப்பட்டமை, அனைத்து தொலைகாட்சிகளிலும், செய்திகளிலும் முக்கிய செய்தியாக வெளியாகியது.

அவருக்கான தண்டனையை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியிருந்தது. ஆனால் அதனை அரசியல் இலாபம் தேடும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சில கருத்துக்களை முன்வைப்பது சட்டத்தை மதிக்காத தன்மையை எடுத்துகாட்டுகிறது.

குறிப்பாக அதனை நீதியமைச்சரே கூறுவது நீயாயமான ஒன்றா?

உங்கள் அரசாங்கத்தில் உள்ள முன்னாள் சபாநாயகர் போலியான கல்வி சான்றிதழை வழங்கிய ஒருவர். பின்னர் அதன் உண்மைதன்மைகள் வெளியாகியவுடன் அது பொய் என அவரே ஒத்துக்கொண்டார்.

இந்த குற்றச்செயலுக்கு அவர் ஜம்பர் அணிவது கட்டாயமாக்கப்படும்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி திசாநாய ஜம்பர் அணிந்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க ஜம்பர் அணிந்துள்ளார். ஒருநாள் உங்கள் தரப்பில் உள்ளவர்களும் ஜம்பர் அணிவார்கள்.

அது தொலைகாட்சியில் கட்டாயம் ஒளிபரப்பபடும் என்பதை மறந்துவிடவேண்டாம்.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நீதியமைச்சரே நீங்களே முதலில் ஜம்பர் அணிவீர்கள்” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

வைத்தியர் சமல் சஞ்சீவ விமர்சனம்: 2026 பட்ஜெட்டில் மருத்துவர்கள் புறக்கணிப்பு – விலங்கு நலனுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...