rtjy 229 scaled
இலங்கைசெய்திகள்

காய்ச்சல் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

Share

காய்ச்சல் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நாட்களில் பதிவாகும் சளியுடன் கூடிய காய்ச்சல் மற்றும் சுவாச நோய் கோவிட்-19 மற்றும் இன்புளுவன்சா உள்ளிட்ட பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சீனாவில் உள்ள குழந்தைகளிடையே வேகமாக பரவி வரும் நிமோனியா குறித்து பல நிபுணர் குழுக்கள் ஏற்கனவே விசாரணைகளை தொடங்கியுள்ளன.

இந்த சுவாச நோய் குழந்தைகளிடையே அதிகளவில் பரவி வருவதாகவும், வேகமாக பரவி வருவதால் நோய் தீவிரமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, குளிர்காலம் வருவதால், நோயாளியின் நிலை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.

குளிர்காலம் தொடங்கியவுடன் பரவும் இதுபோன்ற அடையாளம் தெரியாத வைரஸ்களால் நாடு முழுவதும் தொற்றுநோய் நிலைமைகள் உருவாகுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

எனவே, பல நிபுணர் குழுக்கள் இது தொடர்பில் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சீன சுகாதார திணைக்களம் இது தொடர்பான விரிவான தரவுகளை கோரியுள்ளதாகவும் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் சளி மற்றும் காய்ச்சல் சுவாச நோய் பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் எனவும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

எனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாடசாலை, பயிற்சி வகுப்புகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பெற்றோர்களிடம் குழந்தை நல மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...