குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்!
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்!

Share

குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்!

குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் அவர்களை தாமதமின்றி வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜி. விஜேசூரிய பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைகள் தொடர்பில் சிலர் உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், எனவே குழந்தைகளை வைத்தியசாலைக்கு அழைத்துவர பெற்றோர் அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரம் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் இரண்டு வயது குழந்தை உயிரிழந்ததை முன்னிலைப்படுத்தி சிலர் வைத்தியசாலை தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

குழந்தையின் சத்திரசிகிச்சை தொடர்பான அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளது. கிருமிகள் உட்சென்றதால் குழந்தை உயிரிழந்துள்ளது.

இருப்பினும், வைத்தியசாலையில் தினமும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன,

மேலும் குழந்தைகளுக்கு எம்.ஆர்.ஐ. பரிசோதனைகள், CT பரிசோதனைகள் மற்றும் இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் குழந்தைகளுக்கு தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தாமல் வைத்தியசாலைக்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...