17 1
இலங்கைசெய்திகள்

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சாதித்துக் காட்டிய பெண் பரீட்சார்த்திகள்

Share

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைகளில் ஆண் பரீட்சார்த்திகளை விட பெண் பரீட்சார்த்திகள் அதிக சதவீதத்தில், பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை எழுதிய அனைத்து பரீட்சார்த்திகளில் 64.73% பேர் பல்கலைக்கழக நுழைவுத் தகுதி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெண் பரீட்சார்த்திகளில், 71.93% பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர், அதே நேரத்தில் ஆண் பரீட்சார்த்திகளில் 60.24% பேரே பல்கலைக்கழகத் தகுதியை பெற்றுள்ளனர்.

மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்த மாணவர்களின் சதவீதத்திலும் இதேபோன்ற போக்கு அவதானிக்கப்பட்டுள்ளது.

அதில், ஆண் பரீட்சார்த்திகளில் 13.87% மானோரும், பெண் பரீட்சார்த்திகளில் 8.6% மானோரும் மூன்று பாடங்களிலும் சித்தியடையவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...