tamilnaadi 20 scaled
இலங்கைசெய்திகள்

தாயின் கையிலிருந்து விழுந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞனின் நெகிழ்ச்சி

Share

தாயின் கையிலிருந்து விழுந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞனின் நெகிழ்ச்சி

கேகாலை, கித்துல்கல பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் இருந்து கீழே விழுந்த கைக்குழந்தையின் உயிரை காப்பாற்றியமை மகிழ்ச்சி அளிப்பதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.

மாத்தறையை சேர்ந்த ருவன் சஜித் குமார் சூரியஆராச்சி என்ற இளைஞனே இந்த குழந்தையை காப்பாற்றியுள்ளார்.

நாங்கள் குடும்பமாக ஸ்ரீ பாத சென்று திரும்பி வந்து கொண்டிருந்தோம். இரவு உணவு சாப்பிட இடம் தேடினோம்.

அப்போது நள்ளிரவு 12 மணியை நெருங்கிவிட்டது. கித்துல்கல வீதியில் ஏதோ துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.

எனினும் அதற்கு மேல் வாகனத்தை ஓட்டி வந்துக் கொண்டிருந்த போது திடீரென சந்தேகம் ஏற்பட்டது. வானை நிறுத்தி பரிசோதித்த போது ஒரு கைக் குழந்தை ஒன்று உயிருடன் இருந்தது.

எந்த ஆபத்தும் இல்லாமல் குழந்தை எப்படி இந்த வழியில் விழுந்தது என்று நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

வீதியோரம் காடு. மிருகத்திடம் சிக்கியிருந்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகியிருக்கும். விசாரணை நடத்துவதற்காக இந்தக் குழந்தையை கித்துல்கல பொலிஸாரிடம் ஒப்படைத்தேன்.

எனினும் பின்னர் தான் முச்சக்கரவண்டியில் பயணித்த தாயின் கைகளில் இருந்து குழந்தை வீதியில் விழுந்தமை தெரிய வந்ததாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...