18 26
இலங்கைசெய்திகள்

கொழும்பில் கொடூரமாக மகனை தாக்கிய தந்தையின் வெறிச்செயல்

Share

கொழும்பில் கொடூரமாக மகனை தாக்கிய தந்தையின் வெறிச்செயல்

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் மகனை குத்தி காயப்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

போதைக்கு அடிமையான தந்தையால் மகன் தாக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டார்.

மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த அப்துல் அஸீஸ் மொஹமட் என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக போதைப்பொருள் பாவனை காரணமாக புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்ட சந்தேகநபர், உரிய புனர்வாழ்வு நடவடிக்கையின் பின்னர் வீடு திரும்பிய நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் மகன் மாளிகாவத்தை, ஜும்மா வீதி பகுதியில் மரக்கறி விற்பனை செய்யும் வியாபாரி என தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான தந்தை கடந்த 21ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் மரக்கறி வியாபார நிலையத்திற்குச் சென்ற போது, ​​ மகனை கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தில் குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த மகன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பெற முடியாது என பொலிஸார், நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...