இலங்கைசெய்திகள்

சாரதியின் நித்திரை கலக்கம் : பறிபோனது தந்தையின் உயிர் : மகள் படுகாயம்

Share
12 16
Share

சாரதியின் நித்திரை கலக்கம் : பறிபோனது தந்தையின் உயிர் : மகள் படுகாயம்

வான் சாரதியின் நித்திரை கலக்கத்தால் ஏற்பட்ட கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தந்தை சம்பவ இடத்தில் பலியானதுடன் மகள் படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பு(colombo) – சிலாபம் பிரதான வீதியில் மஹா வெவ நகருக்கு அருகில் இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பம்பல பிரதேசத்தைச் சேர்ந்த ஜூட் நிரோஷன் (வயது 50) உயிரிழந்துள்ளதுடன் 24 வயதுடைய மகள் காயமடைந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மகளுடன் உறவினர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய வேளை இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான வான் அரச நிறுவனமொன்றுக்கு சொந்தமானது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சாரதியின் நித்திரை கலக்கத்தால் வான், வீதியை விட்டு விலகி, எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது பாய்ந்து வீதியின் ஓரத்தில் இருந்த கட்டிடத்தில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தொடுவாவ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...