12 16
இலங்கைசெய்திகள்

சாரதியின் நித்திரை கலக்கம் : பறிபோனது தந்தையின் உயிர் : மகள் படுகாயம்

Share

சாரதியின் நித்திரை கலக்கம் : பறிபோனது தந்தையின் உயிர் : மகள் படுகாயம்

வான் சாரதியின் நித்திரை கலக்கத்தால் ஏற்பட்ட கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தந்தை சம்பவ இடத்தில் பலியானதுடன் மகள் படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பு(colombo) – சிலாபம் பிரதான வீதியில் மஹா வெவ நகருக்கு அருகில் இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பம்பல பிரதேசத்தைச் சேர்ந்த ஜூட் நிரோஷன் (வயது 50) உயிரிழந்துள்ளதுடன் 24 வயதுடைய மகள் காயமடைந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மகளுடன் உறவினர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய வேளை இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான வான் அரச நிறுவனமொன்றுக்கு சொந்தமானது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சாரதியின் நித்திரை கலக்கத்தால் வான், வீதியை விட்டு விலகி, எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது பாய்ந்து வீதியின் ஓரத்தில் இருந்த கட்டிடத்தில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தொடுவாவ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...