10 4 scaled
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் தந்தையால் 11 வயது மகளுக்கு துயரம்

Share

முல்லைத்தீவில் தந்தையால் 11 வயது மகளுக்கு துயரம்

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தனது மகளை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய தந்தை நேற்றிரவு (06.03.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த 34 வயதான நபரொருவரே தனது 11 வயது மகளை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூலித் தொழிலாளியான குறித்த தந்தை கடந்த மூன்று வருடங்களாக தனது மகளை தவறதான செயற்பாட்டிற்கு உட்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையின் கொடூர செயலை தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தாயார் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நேற்று (06) சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை முல்லைத்தீவு மாவட்ட வைத்திசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...