10 46
இலங்கைசெய்திகள்

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தைக்கும் மகளுக்கும் நேர்ந்த பரிதாபம்

Share

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தைக்கும் மகளுக்கும் நேர்ந்த பரிதாபம்

கனடாவில் (Canada) இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த தந்தையும் , மகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்தில், யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை பூர்வீகமாக கொண்டவரும் தற்போது கனடாவில் வசித்து வருபவருமான புஸ்பராஜா பகீரதன் (வயது 40) அவரது மகளான பகீரதன் றியானா (வயது 03) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனடாவில், அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து, காயமடைந்த தனது மகளை விபத்துக்கு உள்ளான வாகனத்தில் இருந்து மீட்டு, அதிவேக நெடுஞ்சாலையை கடக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது , மற்றுமொரு வாகனம் அவர்கள் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தந்தையும், மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மூன்று வாகனங்கள் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கனேடிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...