24 6618a49354d3b
இலங்கைசெய்திகள்

பிரபல வர்த்தகரின் சொகுசு வீட்டில் கொள்ளை: சிக்கிய சந்தேகநபர்கள்

Share

பிரபல வர்த்தகரின் சொகுசு வீட்டிள்ல் கொளை: சிக்கிய சந்தேகநபர்கள்

கந்தானை – வெலிகம்பிட்டிய தேவாலய வீதியிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் சொகுசு வீட்டினுள் நுழைந்து சுமார் 44 இலட்சம் ரூபா பெறுமதியான 27 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கண்டியின் மெனிகின்ன, பன்வில மற்றும் கம்பஹா பிரதேசங்களைச் சேர்ந்த 24, 27 மற்றும் 28 வயதுடைய மூன்று இளைஞர்கள் ஜாஎல மற்றும் கம்பஹா பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திருடப்பட்ட தங்க நகைகளை விற்பனை செய்து பெறப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட வாகனத்தை சந்தேகநபர்களுடன் சேர்த்து கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனத்திற்கு 14 இலட்சம் ரூபா கைப்பணமாக (குத்தகை முறையின் கீழ்) செலுத்தி 19 இலட்சத்திற்கு வாகனம் வாங்கியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வீட்டின் முன் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கமெரா காட்சிகளை அவதானித்த பின்னர், சந்தேகத்தின் பேரில் முதலில் அடையாளம் காணப்பட்ட சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் மேலதிக தகவல் கிடைத்துள்ளது

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் கொள்ளையடித்து கிடைத்த பணத்தை செலவு செய்து அனுராதபுரம், எல்ல , நுவரெலியா ஆகிய இடங்களில் காரில் பயணம் செய்து ஆடம்பர ஹோட்டல்களில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...