5 36
இலங்கைசெய்திகள்

முன்னணி இந்திய திரைப்பட நடிகர் மீது கத்திகுத்து : அதிகாலை நடந்த அதிர்ச்சி சம்பவம்

Share

முன்னணி இந்திய திரைப்பட நடிகர் மீது கத்திகுத்து : அதிகாலை நடந்த அதிர்ச்சி சம்பவம்

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் (Saif Ali Khan) மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இந்திய (India) ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (16.01.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நடிகர் சைஃப் அலி கானின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் கொள்ளையிட முயற்சித்துள்ளார்.

இதன்போது நடிகர் சைஃப் அலி கான் அதனை தடுக்க முற்பட்ட போது இந்த கத்திகுத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நடிகர் சயிஃப் அலிகான் தற்போது மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பாந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...