இலங்கைசெய்திகள்

முன்னணி இந்திய திரைப்பட நடிகர் மீது கத்திகுத்து : அதிகாலை நடந்த அதிர்ச்சி சம்பவம்

Share
5 36
Share

முன்னணி இந்திய திரைப்பட நடிகர் மீது கத்திகுத்து : அதிகாலை நடந்த அதிர்ச்சி சம்பவம்

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் (Saif Ali Khan) மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இந்திய (India) ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (16.01.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நடிகர் சைஃப் அலி கானின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் கொள்ளையிட முயற்சித்துள்ளார்.

இதன்போது நடிகர் சைஃப் அலி கான் அதனை தடுக்க முற்பட்ட போது இந்த கத்திகுத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நடிகர் சயிஃப் அலிகான் தற்போது மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பாந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...