24 66399f72ea3e8
இலங்கைசெய்திகள்

யாழில் துயர சம்பவம்: 5 பெண் பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

Share

யாழில் துயர சம்பவம்: 5 பெண் பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

யாழ். புத்தூர் (Jaffna) பகுதியில் மரத்தில் இருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (6.5.2024) யாழ். புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

கலாசாலை வீதி, திருநெல்வேலியைச் சேர்ந்த 62 வயதுடைய செல்லமுத்து சிவலிங்கம் என்ற 5 பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிவன் கோவிலுக்கு அருகாமையில் நின்ற மரத்தின் கிளைகளை வெட்டிய போதே குறித்த நபர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு (Jaffna teaching hospital) கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...