6 25
இலங்கைசெய்திகள்

காவல்துறையால் கைதான இளம் குடும்பஸ்தர் இரத்தவாந்தி எடுத்து உயிரிழப்பு : போராட்டத்தில் மக்கள்

Share

காவல்துறையால் கைதான இளம் குடும்பஸ்தர் இரத்தவாந்தி எடுத்து உயிரிழப்பு : போராட்டத்தில் மக்கள்

வாகன விபத்து தொடர்பில் கைதான இளம் குடும்பஸ்தர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த நிலையில் நேற்று (11) காவல்நிலையம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் ஒரு குழந்தைக்கு தந்தையான 24 வயதுடைய ஆர்.எம். சமித டில்ஷான் என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார். வாதுவ பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வாகன விபத்து சம்பவம் தொடர்பில் வாதுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பும் போது இரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட தனது கணவர் தன்னை காவல்துறையினர் தடியால் கடுமையாக தாக்கியதாகவும், நெஞ்சு வலிக்கிறது என்றும் கூறியதாக அவருடைய மனைவி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி ரோஷினி லக்மாலி பாணந்துறை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இரத்த வாந்தி எடுத்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பின்னர் அவர் இறந்துவிட்டதாக ஊடகங்களிடம் மனைவி கூறினார்.

இதேவேளை காவல்துறையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாக தெரிவித்து, காவல் நிலையத்தின் முன்பும் அதைச் சுற்றியும் சுமார் 40 பேர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தையடுத்து வாதுவ காவல்துறையினரின் பிரதான நுழைவாயில் வீதித் தடைகளினால் முற்றாக அடைக்கப்பட்டிருந்ததுடன் கிட்டத்தட்ட 20 அதிகாரிகள் கொண்ட குழு பிரதான வீதியை மறித்து பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...