சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் இன்று (டிசம்பர் 10) உணர்வுபூர்வமான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக இடம்பெற்ற இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறும், நீதி கோரிய பதாதைகளைத் தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றும், “எமது உறவுகள் எங்கே? எமது உறவுகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை” என அவர்கள் உணர்ச்சி பொங்க வலியுறுத்தினார்கள்.
அத்துடன் அரசியல் கைதிகளுக்கான விடுதலை, பௌத்தமயமாக்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்ததுடன் சர்வதேச நாடுகள் மனித உரிமை தினத்திலாவது தங்களுடைய துன்பங்களை புரிந்து கொண்டு தமக்கான தீர்வை பெற்று தருவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சர்வதேச நாடுகள் மனித உரிமை தினத்திலாவது தங்களுடைய துன்பங்களைப் புரிந்துகொண்டு, தமக்கான தீர்வைப் பெற்றுத் தருவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் உருக்கமாகக் கோரிக்கை விடுத்தனர்.
பாதிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் பலரும் இதில் கலந்துகொண்டு கண்ணீர் மல்க இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

