வற் வரி தொடர்பில் பொய் அறிக்கை: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அரசாங்கம்

tamilni 26

வற் வரி தொடர்பில் பொய்யான அறிக்கைகளை வெளியிடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

வற் வரிக்கு தொடர்பில்லாத தகவல்களை உருவாக்கி மக்களைத் தூண்டி விடுபவர்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வற் திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, வரி திருத்தம் தொடர்பில் மக்கள் சரியான புரிதலை கொண்டிருப்பது மிகவும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version