25 68fa2cc1432fd
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Share

முன்மொழியப்பட்ட தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வரைவு எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி ஆவணம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

2026 கல்வி சீர்திருத்த முன்மொழிவாக பகிரப்பட்டு வரும் வரைவு ஆவணம், அமைச்சகத்தினாலோ அல்லது அதனுடன் இணைந்த எந்தவொரு நிறுவனத்தினாலோ வெளியிடப்படவோ அங்கீகரிக்கப்படவோ இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, போலி ஆவணத்தைத் தயாரித்து பரப்புவதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் சட்ட நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி ஆர்ப்பாட்டம்: கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு – தையிட்டி பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட...

25 68123cd9dd1b1
செய்திகள்இலங்கை

எரிபொருள் இருப்பு உறுதி; ஜனவரி விலை திருத்தம் குறித்து இன்னும் முடிவில்லை – கனியவளக் கூட்டுத்தாபனம்!

தேசிய எரிபொருள் தேவையை எவ்விதத் தடையுமின்றி நிறைவு செய்யத் தேவையான போதியளவு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக...

google logo
செய்திகள்உலகம்

ஊழியர்களை சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்குமாறு கூகுள் எச்சரிக்கை!

அமெரிக்க விசா வைத்திருக்கும் தனது ஊழியர்கள் சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என கூகுள் நிறுவனம்...

image 42fd4006b9
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளமைக்க யுனிசெப் ஆதரவு: பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் முக்கிய சந்திப்பு!

அண்மைக்கால அனர்த்தங்களினால் சேதமடைந்த பாடசாலைக் கட்டமைப்புகளைச் சீரமைப்பது மற்றும் மாணவர்களின் கல்வியைத் தொடர்வது குறித்து பிரதமர்...