24 665a92d204827
இலங்கைசெய்திகள்

இலங்கை கடவுச்சீட்டு விநியோகத்தில் பாரிய மோசடி…!

Share

இலங்கை கடவுச்சீட்டு விநியோகத்தில் பாரிய மோசடி…!

வெளிநாட்டில் தங்கியிருக்கும் பாதாள உலக குழுவினருக்கு கடவுச்சீட்டு வழங்கும் போது அவர்களின் உண்மையான பெயர்களுக்கு மேலதிகமாக போலியான பெயர்களிலும் தயார் செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை வவுனியா அலுவலகத்தில் அச்சிடப்பட்டவை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (Criminal Investigation Department ) மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், இரண்டு வகையான கடவுச்சீட்டுகளிலும் ஒரே மாதிரியான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, குடிவரவுத் திணைக்களத்தின் தரவு அமைப்புக்குள் அனுப்பப்பட்டுள்ளதாக விசேட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பல அதிகாரிகளின் உதவியுடன் இந்தப் போலி கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும், இவ்வாறு தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 20 எனவும் அதில் 14 டுபாய் பாதாள உலகக் குழுவினரின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (Criminal Investigation Department ) தெரிவித்துள்ளது.

இந்த போலி கடவுச்சீட்டிற்காக ஐந்து லட்சம் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை வவுனியா அலுவலகத்தில் அச்சிடப்பட்டவை என விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் பணிபுரியும் நிர்வாக சேவை அதிகாரிகள் இருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் அண்மையில் கைது செய்தது.

இந்த மோசடியுடன் தொடர்புடைய வேறு சிலரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, ஆனால் இரண்டு அதிகாரிகளையும் கைது செய்யும் போது சில தரப்பினர் பலத்த அழுத்தம் பிரயோகித்து கைது செய்வதைத் தடுக்க முயன்றனர்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தரவு அமைப்பு இருந்தும், டுபாயில் பாதாள உலகக் குழுவினர் தயாரித்த போலி கடவுச்சீட்டிலும் உண்மையான கடவுச்சீட்டிலும் ஒரே கைரேகையை ஊழல் அதிகாரிகள் பதித்துள்ளனர்.

கோடிக்கணக்கான மதிப்புள்ள தரவு அமைப்புகளை வாங்குவதில் எந்தப் பயனும் இல்லை எனவும் அவர்கள் பணத்திற்காக தரவு அமைப்புகளையும் மாற்றுவதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...