25 69133f673e45f
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பு நீதிமன்றத்தில் செவ்வந்தி பாணியில் மோசடி: போலி சட்டத்தரணி விளக்கமறியல் நீடிப்பு!

Share

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்திற்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு, பொதுமக்கள் பலரிடம் இலட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போலிச் சட்டத்தரணியை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (திங்கட்கிழமை, டிசம்பர் 8) உத்தரவிட்டார்.

குறித்த போலிச் சட்டத்தரணி கடந்த நவம்பர் 8ஆம் திகதி ஒந்தாச்சிமடம் பகுதியில் வாடகைக்குக் குடியிருந்த வீடு ஒன்றில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவர் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை போல அணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்துள்ளார். பொதுமக்களிடம் வழக்காடித் தருவதாகக் கூறி பல இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளார்.

அத்துடன், சில சட்டத்தரணிகளையும் அவர் ஏமாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபர் இன்று சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான், அவரை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...