12 4
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்

Share

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பாரிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மாத்தறை பிரதேசத்தில் நிறுவனமொன்றை நிறுவி மோசடியான முறையில் வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து 130 இலட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்திற்கு 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த நிறுவனம் வேலைவாய்ப்பு பணியகத்தில் முன்னர் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், அதன் வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரம் பெப்ரவரி 29ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளது.

இதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, அவரை தலா 5 இலட்சம் ரூபா 2 சரீரப் பிணைகளில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடைவிதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...