9 33
இலங்கைசெய்திகள்

டயானா மீதான போலி ஆவண குற்றச்சாட்டு: நீதிமன்றின் உத்தரவு

Share

டயானா மீதான போலி ஆவண குற்றச்சாட்டு: நீதிமன்றின் உத்தரவு

சட்டவிரோத இரட்டைக் குடியுரிமைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா (Diana Gamage) கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் டயானா கமகேவை முன்னிலைப்படுத்திய போது மூன்று குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி முதல் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தவறான தகவல்களை வழங்கி இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை மற்றும் சட்டவிரோத இரட்டைக் குடியுரிமையை வைத்திருந்தமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சட்டமா அதிபர், டயானா கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே, இந்த குற்றச்சாட்டின் பேரில் டயானாவின், நாடாளுமன்ற பதவி பறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...