கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு என குழப்பத்தை ஏற்படுத்திய நபர்

18 22

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு என குழப்பத்தை ஏற்படுத்திய நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல், வாரியபொல பகுதியில் வைத்து 67 வயதான நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 27ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார்.

 

குறித்த நபரால் விமான நிலைய முகாமையாளருக்கும் விமான நிறுவனத்துக்கும் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த அழைப்பிற்கு பிறகு, விமான நிலைய செயல்பாடுகள் தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

அத்துடன் விமான நிலையமும் பயணிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் மற்றும் விமானங்கள் தாமதமாகியதாக தெரியவந்துள்ளது.

 

Exit mobile version