tamilni 171 scaled
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் எச்சரிக்கை

Share

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் எச்சரிக்கை

சுவாசக்குழாய் தொற்று உள்ள சிறு குழந்தைகளுக்கு கண் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் கண் நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் ஹிரண்ய அபேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் கொழும்பு பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் குழந்தைகளுக்கு கண் நோய் பரவியது.

உலக பார்வை தினத்தை முன்னிட்டு நேற்று கண் வைத்தியசாலையில் நடைபெற்ற மாநாட்டில் வைத்தியரிடம் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பொதுவாக சிறு குழந்தைகளுக்கு மூச்சுக்குழாய் தொற்று காரணமாக கண் நோய்கள் பரவுவதாகவும், மூன்று நாட்களுக்கு மேல் இந்நோய் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கண்கள் சிவப்பாக இருந்தால், கண்களில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகமாக இருந்தால், பெற்றோர்கள் கவனம் செலுத்தி, பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல், வீட்டிலேயே தங்க வைத்து, மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலையொன்றில் இவ்வாறான அறிகுறிகளுடன் கூடிய மாணவர்கள் இருந்தால் உடனடியாக நோயுற்ற மாணவர்களை ஏனையவர்களிடம் இருந்து பிரித்து வைப்பது மிகவும் அவசியமானது என விசேட வைத்தியர் ஹிரண்ய அபேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கண் நோய் குறித்து பெற்றோர்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...