tamilni 435 scaled
இலங்கைசெய்திகள்

பிரதமர் மீது பகிரங்க குற்றச்சாட்டு

Share

பிரதமர் மீது பகிரங்க குற்றச்சாட்டு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என பிரதமரின் பெயரை கூறி பணம் பறிக்கும் குழு செயற்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,டென்மார்க்கில் வேலை வாங்கி தருவதாக சொல்லி இந்த நாட்டு இளைஞர்களிடம் தலா 6 லட்சம் ரூபாய் வசூலிக்கும் செயற்பாட்டில் பிரதமரின் ஒருங்கிணைப்பு அதிகாரி என்று கூறிக் கொள்ளும் ஒரு குறிப்பிட்ட நபரும் குழுவும் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து முறையான விசாரணை வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன,“இந்த கேள்வியை எதிர்க்கட்சி தலைவர் கேட்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சம்பவத்தில் நான் ஒருபோதும் ஈடுபடவில்லை. மேலும் எனது நிறுவனம் இதில் ஈடுபடவில்லை.

இந்த விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நம் நாட்டில் பல்வேறு நபர்களின் பெயர்களை வைத்து இவ்வாறு கடத்தல் நடக்கிறது. இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.”என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...