18 7
இலங்கைசெய்திகள்

தனியார் வாகன இறக்குமதி தொடர்பில் திறைசேரி கூறும் விளக்கம்

Share

தனியார் வாகன இறக்குமதி தொடர்பில் திறைசேரி கூறும் விளக்கம்

தனியார் வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கும் தீர்மானத்தை, அரசாங்கம் அடுத்த வருட ஆரம்பம் வரை ஒத்திவைத்துள்ளது என திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் போதுமான அளவு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அத்துடன் வாகன இறக்குமதியை எளிதாக்குவதற்கு அந்நிய கையிருப்பு போதுமான அளவில் இல்லை.

எனவேதான் வாகன இறக்குமதித் தடையை நீக்குவதை, பின்தள்ளிவைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி வெளியேறும்.

எவ்வாறாயினும், வர்த்தக வாகனங்களான பாரவூர்திகள், பேருந்துகள், டிரக்குகள் மற்றும் சுற்றுலாத் துறையில் பயன்படுத்தப்படும் வேன்களின் இறக்குமதி அடுத்த மாதம் ஆரம்பிக்கும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில், தனியார் வாகன இறக்குமதி மீதான தடை நீக்கப்பட்டதும், அரச அமைச்சகங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களும் இறக்குமதி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சார வாகனங்கள் மற்றும் தனியார் கார்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க அரசு திட்டமிட்டிருந்தது.

அதுவும் தற்போது அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தனியார் வாகன இறக்குமதியில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளே அதிக எண்ணிக்கையில் உள்ளன.

எனினும் பொருளாதாரம் இன்னும் போதுமான அளவு மீட்கப்படாததால், இந்த வாகனங்களின் இறக்குமதியை அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மருத்துவர்கள் மற்றும் மூத்த அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சுமார் 10,000 வாகன அனுமதிப்பத்திரங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன.

அடுத்த ஆண்டில், இந்த வாகன இறக்குமதிகளையும் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என்றும், ஆனால் அவர்களின் வாகனங்களும் மொத்தமாக இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...