5
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் மூன்று நாடுகள் பயணத்துக்கு 18 இலட்சம் ருபாய்: தெளிவுப்படுத்திய அரசாங்கம்

Share

ஜனாதிபதியின் மூன்று நாடுகள் பயணத்துக்கு 18 இலட்சம் ருபாய்: தெளிவுப்படுத்திய அரசாங்கம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெறும் 1.8 மில்லியன் ரூபாய்களில், மூன்று நாடுகளுக்குச் சென்று வந்தமை தொடர்பில், அரசாங்கம் தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்திய பயணத்துக்கு 1.2 மில்லியன் ரூபாய்கள் மட்டுமே செலவிடப்பட்டது என்றும், சீன பயணத்துக்கு 386,000 மற்றும் துபாய் வருகைக்கு 279,970 மட்டுமே செலவிடப்பட்டது என்றும், அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சீனா மற்றும் துபாய் பயணங்களுக்கு இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாகவும், இந்திய பயணத்துக்கு விமான டிக்கெட்டுகளுக்கு 386,000 செலவிடப்பட்டதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்திய பயணத்துக்காக ஜனாதிபதி செயலகம் மேற்கொண்ட மொத்த செலவு 386,000 மதிப்புள்ள விமான டிக்கெட்டுகள் உட்பட்ட 1,222,000 ரூபாய்கள் என்று அமைச்சர் கூறினார்.

சீனப் பயணத்திற்காக ஜனாதிபதிக்கு தினசரி 2,055 அமெரிக்க டொலர்களும், துபாய் பயணத்திற்காக 960 அமெரிக்க டொலர்களும் கிடைத்ததன.

எனினும் , அவர் அனைத்துப் பணத்தையும் ஜனாதிபதி செயலகத்திற்குத் திருப்பி அனுப்பியதாகவும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி திசாநாயக்க மூன்று நாடுகளுக்கு 1.8 மில்லியன் செலவில் எவ்வாறு விஜயம் செய்தார் என்பதையும், மஹிந்த ராஜபக்ச தனது வெளிநாட்டுப் பயணங்களுக்காக 3,572 மில்லியன் ரூபாய்களை செலவழித்தார் என்பதையும், நாடாளுமன்ற உறுப்பினர்களால் உணர முடியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று ஜெயதிஸ்ஸ கூறினார்.

ஜனாதிபதி மஹிந்தவின் 3,572 மில்லியன் என்பது ஜனாதிபதி செயலகம் ஏற்றுக்கொண்ட செலவுகள் மட்டுமே என்றும், மேலும் செலவுகள் அந்தந்த அமைச்சகங்களால் ஏற்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், வெளிநாட்டுப் பயணங்களுக்காக அந்தந்த அமைச்சகங்கள் ஏற்றுக்கொண்ட செலவுகளை தாங்கள் வெளிப்படுத்தவுள்ளதாகவும் என்று அவர் கூறினார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...