tamilni 434 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையர்! கடைசி ஆசையை நிறைவேற்ற மறுக்கும் குடும்பத்தினர்

Share

வெளிநாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையர்! கடைசி ஆசையை நிறைவேற்ற மறுக்கும் குடும்பத்தினர்

போதைப்பொருள் கடத்தல் காரணமாக கடந்த 27ஆம் திகதி குவைத் மத்திய சிறைச்சாலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரின் சடலத்தை நாட்டுக்கு கொண்டுவர உறவினர்கள் விருப்பமில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மேல் ஹல்மில்லேவ அதிரணிகம பகுதியைச் சேர்ந்த ஜூட் ரவிந்து கூப்பர் (வயது 43) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் பிரியங்கரகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், அவரது சடலத்தை நாட்டுக்கு கொண்டுவர உறவினர்கள் விருப்பமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரின் இறுதி விருப்பத்தின்படி, அவரது உடல் இலங்கையில் உள்ள அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் குவைத் தூதரகத்தின் ஊடாக உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்

அநுராதபுரம் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் சிரேஷ்ட முகாமையாளர் எச்.எம்.சுனில் அதிராணிகம உயிரிழந்தவரின் வீட்டுக்குச் சென்று உறவினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் குவைத் தூதுவர் கே. காண்டீபனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உறவினர்கள் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...