7 24
இலங்கைசெய்திகள்

ஏழு மாதங்களில் கிடைக்கப்பெற்றுள்ள 122 பில்லியன் ரூபா வருமானம்

Share

ஏழு மாதங்களில் கிடைக்கப்பெற்றுள்ள 122 பில்லியன் ரூபா வருமானம்

கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான ஏழு மாதங்களில் கலால் திணைக்களம் 122 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி குறிப்பிட்டுள்ளார்.

“2024 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமான இலக்கு 230 பில்லியன் ரூபாவாகும். கலால் அனுமதிகளை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும்.

புதிய கலால் உரிமங்கள் அரசியல் நோக்கத்துடன் வழங்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், இது ஜனாதிபதி தேர்தலுக்காகவோ அல்லது வேறு எந்த அரசியல் நோக்கத்துக்காகவோ வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலம் மாத்திரம் 1500 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி மற்றும் பிற காரணங்களால் கலால் உரிமங்களை வழங்கி அரசின் வருவாயை அதிகரிக்க அரசு முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...