7 24
இலங்கைசெய்திகள்

ஏழு மாதங்களில் கிடைக்கப்பெற்றுள்ள 122 பில்லியன் ரூபா வருமானம்

Share

ஏழு மாதங்களில் கிடைக்கப்பெற்றுள்ள 122 பில்லியன் ரூபா வருமானம்

கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான ஏழு மாதங்களில் கலால் திணைக்களம் 122 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி குறிப்பிட்டுள்ளார்.

“2024 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமான இலக்கு 230 பில்லியன் ரூபாவாகும். கலால் அனுமதிகளை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும்.

புதிய கலால் உரிமங்கள் அரசியல் நோக்கத்துடன் வழங்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், இது ஜனாதிபதி தேர்தலுக்காகவோ அல்லது வேறு எந்த அரசியல் நோக்கத்துக்காகவோ வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலம் மாத்திரம் 1500 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி மற்றும் பிற காரணங்களால் கலால் உரிமங்களை வழங்கி அரசின் வருவாயை அதிகரிக்க அரசு முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...