24 665e9fc41fea2
இலங்கைசெய்திகள்

ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களின் நிரந்தர நியமனம்

Share

ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களின் நிரந்தர நியமனம்

இதுவரை நிரந்தர நியமனம் பெறாத 8400 ஊழியர்களுக்கு இன்று (04) முதல் 10 நாட்களுக்குள் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப்படுமென மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் அமைச்சர் ஜானக வக்கம்புர (Janaka Wakkumbura) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (03) அதிபர் ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த திட்டத்தை குழப்புவதற்கு ஒரு குழுவினர் செயல்படுவதை நாம் அறிவோம் எனவே எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

உலக சுற்றாடல் தினத்தை தேசிய ரீதியில் கொண்டாடுவதை இரத்து செய்து அந்த நிதி ஒதுக்கீட்டை மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பத்து இலட்சம் செடிகள் நடப்படும் என்றும் தேசிய கொண்டாட்டத்துடன் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு செடியை நடுமாறும் இராஜாங்க அமைச்சர் கோரியுள்ளார்.

அத்தோடு, வெள்ள நிலைமை சீரானவுடன் அந்த பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளதுடன் அவ்வாறான நிலைமை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ள நிலையில் சேதமடைந்துள்ள பாலங்கள், வடிகாண்கள் மற்றும் வீதிகள் ஆகியவற்றைப் புனரமைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகளும், உள்ளூராட்சி அமைச்சும் இணைந்து அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் நலனுக்கான நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளன.

மேலும், இந்த நடவடிக்கையில் பணத்தை மாத்திரம் கருத்திற்கொள்ளாமல் தேவையான பணிகளை செய்யுமாறு ரணில் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...

MediaFile 1 6
இலங்கைசெய்திகள்

இலங்கை – அமெரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு: மொன்டானா தேசிய பாதுகாப்புப் படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இன்று (நவம்பர் 14) இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முக்கியமான புரிந்துணர்வு...