25 684a2d1c7f215
இலங்கைசெய்திகள்

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Share

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறு மரணமடைந்த மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜி.எம். சாண்டர்ஸ், கே.எம்.எஸ்.ஆர். கொடிதுவக்கு, பிரேமலால் ரணகல, சீ.ஈ. எதிரிசிங்க, டபிள்யூ.எம்.எல். வீரசேகர, உபாலி கல்கமுவ, டபிள்யூ.எல்.எஸ். சோமவீர, டபிள்யூ.டி. கொமசாரு, எப்.எஸ்.கே. ஜோசப், பி.சி.ஜே.டி. விஜேவர்தன (இவர் தற்போது உயிருடன் இல்லை) ஆகியவர்கள் ஆகியோர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு ஒரே தடவையில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டமை வரலாற்றில் முதல் தடவை என பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதவி உயர்வுகளுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 6849c5dfe0a82
உலகம்செய்திகள்

சீனாவுடன் அதிரடியாக ஒப்பந்தம் செய்த ட்ரம்ப்..! நடக்கவுள்ள மாற்றங்கள்

லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

25 684a1d46ac31b
இந்தியாசெய்திகள்

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள சந்தேகம்

இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக...

25 684a2b04cca7e
இலங்கைசெய்திகள்

வெலிகம சம்பவத்தின் போது தவறாக வழிநடத்தப்பட்ட அதிகாரிகள்

2023ஆம் ஆண்டு வெலிகம சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற தன்னையும் ஏனையவர்களையும் மூத்த பொலிஸ் அதிகாரிகள்...

25 684a2fdb31138
உலகம்செய்திகள்

தென்னாபிரிக்காவில் கடும் வெள்ளம்: மாணவர்கள் உட்பட பலர் பலி

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 49 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வெள்ளத்தினால், பாடசாலை பேருந்து...