4 59
இலங்கைசெய்திகள்

மாவையின் மரணத்தில் சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்

Share

மாவையின் மரணத்தில் சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று இரவு காலமானார்.

இந்த நிலையில், தனது 82 ஆவது வயதில் மறைந்த மாவை சேனாதிராஜாவிற்கு இலங்கையின் முக்கிய அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலராலும் இரங்கல்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரனும், மாவை சேனாதிராஜாவிற்கான இரங்கல்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அதன்போது, சுமந்திரன் மாவைக்கு வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில், “மாவை அண்ணன் பேரினவாதத்திறகு எதிரான மாபெரும் அடையாளமாக ஆறு தசாப்தங்களுக்கு மேலாகத் திகழ்ந்தவரும் 1970களில் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவரும் ஆவார்.அவரது மறைவினையொட்டிய எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சுமந்திரன், மாவைக்கு வெளியிட்டுள்ள முகப்புத்தக இரங்கல் பதிவில் கருத்து வெளியிடும் பகுதியை (Comment Section) வரையறுத்துள்ளதாக காட்டுகிறது.

கருத்து பகுதியை வரையறுக்க செய்தால் தங்களுக்கு தேவையானவர்களை தவிர வேறு எந்த ஒரு நபரின் கருத்துக்களையும் தவிர்த்து கொள்ள முடியும்.

இவ்வாறனதொரு பின்னணியில், கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சியின் தலைமை பதவி தொடர்பில் மாவை சேனாதிராஜாவிற்கு எதிராக சுமந்திரன் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டிருந்ததாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

அதன்படி, மாவைக்கான இரங்கல் பதிவில் சுமந்திரன், கருத்து பகுதியை வரையறுத்திருப்பதானது, அவ்வாறான விமர்சனங்களில் இருந்து தன்னை தானே பாதுகாத்து கொள்வதற்காக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

மேலும், சுமந்திரன் உள்ளிட்ட சிலரால் மாவை மரணத்திற்கு முன்னாள் கூட கடும் மன அழுத்தில் இருந்ததாகவும், இறுதி நிகழ்வில் கூட இவர்கள் கலந்து கொள்ள கூடாது என்று மாவை ஆதரவு தரப்புகளில் இருந்து கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடக கருத்துக்கள் குறிப்பிடுகின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...