4 59
இலங்கைசெய்திகள்

மாவையின் மரணத்தில் சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்

Share

மாவையின் மரணத்தில் சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று இரவு காலமானார்.

இந்த நிலையில், தனது 82 ஆவது வயதில் மறைந்த மாவை சேனாதிராஜாவிற்கு இலங்கையின் முக்கிய அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலராலும் இரங்கல்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரனும், மாவை சேனாதிராஜாவிற்கான இரங்கல்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அதன்போது, சுமந்திரன் மாவைக்கு வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில், “மாவை அண்ணன் பேரினவாதத்திறகு எதிரான மாபெரும் அடையாளமாக ஆறு தசாப்தங்களுக்கு மேலாகத் திகழ்ந்தவரும் 1970களில் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவரும் ஆவார்.அவரது மறைவினையொட்டிய எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சுமந்திரன், மாவைக்கு வெளியிட்டுள்ள முகப்புத்தக இரங்கல் பதிவில் கருத்து வெளியிடும் பகுதியை (Comment Section) வரையறுத்துள்ளதாக காட்டுகிறது.

கருத்து பகுதியை வரையறுக்க செய்தால் தங்களுக்கு தேவையானவர்களை தவிர வேறு எந்த ஒரு நபரின் கருத்துக்களையும் தவிர்த்து கொள்ள முடியும்.

இவ்வாறனதொரு பின்னணியில், கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சியின் தலைமை பதவி தொடர்பில் மாவை சேனாதிராஜாவிற்கு எதிராக சுமந்திரன் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டிருந்ததாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

அதன்படி, மாவைக்கான இரங்கல் பதிவில் சுமந்திரன், கருத்து பகுதியை வரையறுத்திருப்பதானது, அவ்வாறான விமர்சனங்களில் இருந்து தன்னை தானே பாதுகாத்து கொள்வதற்காக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

மேலும், சுமந்திரன் உள்ளிட்ட சிலரால் மாவை மரணத்திற்கு முன்னாள் கூட கடும் மன அழுத்தில் இருந்ததாகவும், இறுதி நிகழ்வில் கூட இவர்கள் கலந்து கொள்ள கூடாது என்று மாவை ஆதரவு தரப்புகளில் இருந்து கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடக கருத்துக்கள் குறிப்பிடுகின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...