15 24
இலங்கைசெய்திகள்

ரணிலின் ஊரடங்கு சட்டத்தை விமர்சிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

Share

ரணிலின் ஊரடங்கு சட்டத்தை விமர்சிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் 14 மணி நேர ஊரடங்குச் சட்டத்தை திடீரென நடைமுறைப்படுத்தும் முடிவு பயனற்றது என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணியின் தலைமை பார்வையாளர் நாச்சோ சான்செஸ் அமோர் தெரிவித்துள்ளார்

இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு பணியைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு உரையாற்றிய சான்செஸ் அமோர், அரசாங்கம் ஏன் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை விதித்தது, அது 12 மணி வரை நீட்டிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.

வரலாற்றில் இது மிகவும் அமைதியான தேர்தல் செயல்முறை என்று ஒரு அரச நிறுவனமான தேர்தல் ஆணையம் கூறிய அதே நாளில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது பொருந்தவில்லை என்று அவர் தெரிவித்தார்.

தம்மை பொறுத்தவரை இது பயனற்றது மற்றும் தேவையற்ற ஊரடங்கு உத்தரவு மற்றும் வாக்காளர்களின் சிறந்த நடத்தைக்கு பொருந்தவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்

எனவே வாக்காளர்களின் முன்மாதிரியான நடத்தையை நாடு அங்கீகரிப்பது முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...